சென்னையில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர்.
சென்னை பெரும்பாக்கத்தில் இருந்து பிராட்வே நோக்கிச் சென்ற 102B மாநகரப் பேருந்தும் தீவுத்திடலில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கிப் புறப்பட்ட 21G ஏசி பேருந்தும் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் 102B பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Accident involving two government buses in Chennai; Four injured
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








