தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்
/

கோவை சிறுமி படுகொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதில் அரசு உறுதி!

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார்

News image

கோவை சிறுமி படுகொலை சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 12:04 pm IST

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார் உறுதியளித்துள்ளார்.

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுடன் அமைச்சர் சம்பத்குமார் பேசியதாவது, "புகாரளிக்கப்படுவதற்கு முன்பாகவே சம்பவம் நடந்திருக்கிறது. துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். உடற்கூறாய்வு அறிக்கை வெளியானவுடன், அடுத்தகட்ட விசாரணையும் துரிதப்படுத்தப்படும்.

குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கித் தருவதில் அரசு உறுதியாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரண உதவியைச் செய்யவும் அரசு தயாராக இருக்கிறது. இம்மாதிரியான சம்பவம், இதுவே இறுதியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பயம் இருக்க வேண்டும். இதுபோன்ற சிந்தனையே வராத அளவுக்கு தண்டனைகள் கடுமைப்படுத்த வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அதனைச் செயல்படுத்தவும் செய்வார்.

இந்தக் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவது எங்கள் கடமையாகும் என்று தெரிவித்தார்.

கோவை சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Summary

Coimbatore Girl Murder: Government Committed to Ensuring Maximum Punishment for Culprits

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.