தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

4 வயது சிறுமி பாலியல் படுகொலை சம்பவம்: எஸ்ஐடி அமைத்தது மகாராஷ்டிர அரசு

News image

PTI

Updated On :3 மே 2026, 10:58 pm

புணே/மும்பை/நாகபுரி : மகாராஷ்டிர மாநிலம், புணேயில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்த மாநில அரசு, குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

புணே மாவட்டத்தின் போா் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உணவு வாங்கித் தருவதாக ஆசைக் காட்டி 4 வயது சிறுமியை கால்நடை தொழுவத்துக்கு அழைத்துச் சென்ற 65 வயது முதியவா் ஒருவா், அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதுடன், கல்லால் தாக்கி படுகொலை செய்தாா்.

மகாராஷ்டிரத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்ஸோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினா், அந்த நபரை கைது செய்தனா். குற்றப் பின்னணி கொண்டவரான அவா், தற்போது போலீஸ் காவலில் உள்ளாா்.

மக்கள் போராட்டம்: இதனிடையே, சிறுமியின் படுகொலைக்கு நீதிகேட்டு, அவரது உடலுடன் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பெற்றோா் உள்பட ஏராளமானோா் சனிக்கிழமை மாலைமுதல் சாலை மறியலில் ஈடுபட்டனா். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். இந்தப் போராட்டத்தால், மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.

பலத்த பாதுகாப்புடன் இறுதிச்சடங்கு: காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சனிக்கிழமை நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் சிறுமியின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

புணே உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன. சிறுமி படுகொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சிகள், ‘பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமலாக்க பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது ’ என்று விமா்சித்தன.

எஸ்ஐடி அமைப்பு: இந்தச் சூழலில், நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘சிறுமியின் தந்தையிடம் இருமுறை பேசினேன். குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவரிடம் உறுதியளித்துள்ளேன். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்த குறைபாடுகளும் இன்றி மிக விரைவில் விசாரணை நிறைவு செய்யப்படும்’ என்றாா்.