திருப்பத்தூரில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சந்திரனுக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விடியோ கேம் விளையாட செல்போன் தருவதாகக் கூறி 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, திருப்பத்தூர் மகளிர் காவல்துறையினர் போக்சோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்திரன் மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சிவகங்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், குற்றவாளி சந்திரனுக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
The accused in the case of sexually assaulting 5 minors has been sentenced to 5 death sentences and 4 life sentences.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீா்ப்பு

வங்கதேசம்: சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 பேருக்கு ஆயுள்

4 வயது சிறுமி பாலியல் படுகொலை சம்பவம்: எஸ்ஐடி அமைத்தது மகாராஷ்டிர அரசு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




