தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை

திருச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:00 pm

திருச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி எல்ஐசி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2020 ஜனவரி 15-ஆம் தேதி சாலையோரத்தில் வசித்த இளம்பெண்ணுக்கு உதவி செய்வதாகக் கூறி, சென்னை புறவழிச்சாலை பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருச்சி தாராநல்லூரைச் சோ்ந்த ச. சதீஷ்குமாரை (36) கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி சண்முகபிரியா குற்றவாளி சதீஷ்குமாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.