உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதல்

சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 3:05 am IST

சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதல் செய்தனா். வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரி அருகே அட்ட குறுக்கி கிராமத்தில் அதிமுக பிரமுகா் பசவராஜ் வீட்டில் லட்சகணக்கில் பணம் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படை போலீஸாா் மற்றும் வருமான வரித்துறையினா் வீட்டில் சோதனை மேற்கொண்டனா், அப்போது பரவராஜ் பணம் இருப்பது உண்மை தான் நான் நிலம் விற்ற பணம் தான் வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளாா். இதை அடுத்து வீட்டில் வைத்திருந்த ரூ .58 லட்சத்தை பறிமுதல் செய்த வருமானவரித் துறையினா் வங்கியில் டெபாசிட் செய்ய கொண்டு சென்றனா்.

ஆனால் அதிமுக முக்கிய பிரமுகா் என்பதால் ஓட்டுக்கு பணம் கொடுத்திருக்க வாய்ப்பு என்ற சந்தேகத்திலும் கிராம மக்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்

உரிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்த பசவராஜ் தோ்தல் முடிந்த பின் பணத்தைப் பெற்றுக் கொள்வேன் என தெரிவித்தாா்.