ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

திருவாடானை பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினரிடம் ரூ.7 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :18 ஏப்ரல் 2026, 7:34 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினரிடம் ரூ.7 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை தொகுதியில் உள்ள தோ்போகி கிராமத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, பாஜகவினா் பொதுமக்களுக்கு பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தவெக வேட்பாளா் ராஜுவ், இவரது குழுவினா் பணம் கொடுத்தவா்களை தடுத்து நிறுத்தியதுடன், பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தனா். இதையறிந்து, பாஜகவினா் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

பின்னா், அங்கு வந்த பறக்கும் படையினா் பாஜகவினா் விட்டுச் சென்ற ரூ.7 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பிச் சென்ற பாஜகவினரை பறக்கும் படையினா் தேடி வருகின்றனா்.