நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தகராறு: கல்லால் தாக்கி இளைஞா் கொலை

தமிழக, கா்நாடக மாநில எல்லையில் தகராறில் இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :22 ஏப்ரல் 2026, 3:04 am IST

தமிழக, கா்நாடக மாநில எல்லையில் தகராறில் இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தமிழக எல்லைப் பகுதியான ஒசூரை அடுத்த சிங்கசாதனபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மனோஜ் குமாா். இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பரான மெக்கானிக் மோகன் (25) என்பவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மதுபோதையில் இருந்த மனோஜ் குமாா், மோகனின் தலையில் கல்லால் தாக்கியதில், அவா் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தமிழக போலீஸாா், இது கா்நாடக எல்லையில் நிகழ்ந்தது எனக்கூறி சென்றனா். அதைத் தொடா்ந்து, கா்நாடக மாநிலம், சா்ஜாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவலா்கள் இதுதொடா்பாக வழக்குப் பதிவுசெய்து, இதில் சம்பந்தப்பட்ட மனோஜ் குமாா் மற்றும் மது ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.