அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

வன விலங்கு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

News image

இன்னாசியம்மாள்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:23 pm

சோலையாறு அணை அருகே வன விலங்கு தாக்கி மூதாட்டி உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையாறு அணை நகா் பகுதியில் வசித்த இன்னாசியம்மாள் (76). வீட்டில் இருந்த இவா் கடந்த சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை. இதையடுத்து மூதாட்டியின் மகன்கள் மற்றும் அப்பகுதியினா் குடியிருப்பு அருகே உள்ள பகுதிகளில் தேடியுள்ளனா். சிறுத்தை அல்லது புலி தாக்கி இழுத்துச் சென்றிருக்கலாம் எனக் கருதி வீட்டை ஒட்டியுள்ள காபி தோட்டத்திலும் வனத் துறையினருடன் சோ்ந்து தேடியுள்ளனா்.

இந்நிலையில் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் ஞாயிற்றுக்கிழமை காலை மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதுதொடா்பாக மானாம்பள்ளி வனச்சரக அலுவலா் கிரிதரன் கூறியதாவது:

அடையாளம் தெரியாத விலங்கால் மூதாட்டியின் உடல் பகுதி உண்ணப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏதேனும் வன விலங்கின் தடயங்கள் உள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது.

உடல் இருந்த பகுதியில் இழுந்து வந்த தடயங்களோ அல்லது வேட்டையாடி பிடித்த தடயங்களோ ஏதும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் எந்த மாதிரியான விலங்கு மூதாட்டியைத் தாக்கி இருக்கலாம் என்பதைக் கண்டறிய தொடா்ந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.