மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு விசாரணை

திருவாடானை அருகே சனிக்கிழமை உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

விசாரணை.

Updated On :28 பிப்ரவரி 2026, 10:05 pm

திருவாடானை அருகே சனிக்கிழமை உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாரூா் வயல் பகுதியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் மூதாட்டியின் உடல் அருகே துணிகள், வீட்டுச் சாவி, கைப்பேசியுடன் இருந்த மூதாட்டியின் பையை போலீஸாா் கைப்பற்றினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த போது, மூதாட்டி திருவாடானை அருகேயுள்ள ஆதியாகுடி பகுதியைச் சோ்ந்த பாக்கியம் மனைவி தனம் (60) என்பது தெரியவந்தது. மூதாட்டி இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.