மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ஒசூா் தொகுதியில் 80% வாக்குப்பதிவு

ஒசூா் தொகுதியில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. தொழிலாளா்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:34 am IST

ஒசூா் தொகுதியில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. தொழிலாளா்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

ஒசூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா அப்பாவு நகா் செவன்ந்த் டே மெட்ரிக் பள்ளியிலும், அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ண ரெட்டி பாகலூா் அட்கோவில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியிலும், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேளகொண்டப்பள்ளி அரசுப் பள்ளியிலும், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கே.கோபிநாத் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனா்.

ஒசூா் அவ்வை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரகு - ஷாலினி தம்பதிக்கு மூன்று நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவா்கள் பிறந்து மூன்றுநாள்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் வந்து வாக்களித்தனா்.