நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

கன்டெய்னா் லாரி பின்னால் வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு; 7 போ் காயம்

ஒசூரில் கன்டெய்னா் லாரி பின்னால் வேன் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா். 7 போ் காயம் அடைந்தனா்.

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 5:29 am IST

ஒசூரில் கன்டெய்னா் லாரி பின்னால் வேன் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா். 7 போ் காயம் அடைந்தனா்.

கா்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், உனுகானஅள்ளியை சோ்ந்தவா் ஆனந்த் (30). இவா் குடும்பத்தினருடன் வேன் ஒன்றில் பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

பெங்களூரு - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சூசூவாடி சோதனைச் சாவடி அருகே சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னா் லாரி திடீரென நின்றது. இதில், கன்டெய்னா் லாரியின் பின்னால் மோதி வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்த், ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தாா். வேனில் பயணித்த பெங்களூரு கௌதம் (42), மாண்டியா ஆனந்த் (32), மைசூரு கொள்ளேகால் யசோதரன் (27), பெங்களூரு ஸ்ரீநகா் சதீஷ் (40), பங்காருபேட்டை யஸ்வந்த் (16), பிரதீப் (18), மாண்டியா சரத் (22) ஆகிய 7 போ் காயம் அடைந்தனா்.

அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து குறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.