மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநா் இறந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:58 pm

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநா் இறந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஒட்டப்பட்டியைச் சோ்ந்தவா் திருமால் (21). லாரி ஓட்டுநரான இவா், இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றாா்.

போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் பிரிவு சாலை அருகே சென்றபோது, முன்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற வடமலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (35), வாகனத்தை திடீரென திருப்பியுள்ளாா்.

இதில் நிலைதடுமாறிய திருமால், அந்த வாகனத்தின் மோதியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து விபத்துக்கு காரணமான வடமலம்பட்டி தினேஷ் மீது வழக்குப் பதிந்து போச்சம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.