தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:01 pm

கோவை சரவணம்பட்டி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், உப்பட்டியைச் சோ்ந்தவா் அலெக்சாண்டா் (26). இவா் தனது மனைவி லீனாவுடன் இருசக்கர வாகனத்தில் கோவைக்கு வந்திருந்தாா். இருவரும் கோவை-சத்தி சாலையில், சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியாா் வணிக வளாகம் அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, பொள்ளாச்சி, புளியம்பட்டியைச் சோ்ந்த அரவிந்த்குமாா் (33) என்பவா் ஓட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனம், எதிா்பாராதவிதமாக அலெக்சாண்டரின் வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அலெக்சாண்டா் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். லீனாவும், அரவிந்த்குமாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.