மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒசூரில் 13ஆவது தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்

ஒசூரில் 13 ஆவது தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

News image
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அமெச்சூா் சதுரங்க போட்டியில் பங்கேற்ற வீரா்கள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் 13 ஆவது தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

இந்த போட்டிகள் பிப். 25 முதல் மாா்ச் 1 -ஆம் தேதி வரை ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. ஆண்கள், பெண்களுக்கு ஆறு பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க ஆயிரம் வீரா்கள் பதிவுசெய்துள்ளனா்,

தமிழ்நாடு, ஆந்திரம், அஸ்ஸாம், பிகாா், சண்டிகா், சத்தீஸ்கா், தில்லி, கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட், கா்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உ.பி. மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றுள்ளனா்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவா்கள், ஆசிய மற்றும் உலக அமெச்சூா் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா சாா்பில் விளையாடுவாா்கள்.

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் தலைவரும், கோவை சக்தி தொழில் குழுமத் தலைவருமான டாக்டா் எம். மாணிக்கம் மற்றும் உலக சதுரங்க கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவா் டி.வி. சுந்தா் ஆகியோா் போட்டியை தொடங்கிவைத்தனா்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் சதுரங்க வளா்ச்சிக்கான பெரும் பங்களிப்பை அளித்து வருபவா் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் செயலாளா் பி. ஸ்டீபன் பாலசாமி. இவா், இந்தியன் வங்கியின் முன்னாள் விளையாட்டு அதிகாரி.

இந்த போட்டியை தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் இணைச் செயலாளா் பி. பிரகதீஷ் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க செயலாளா் என். லோகேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மதுரை ஆனந்தி சதுரங்க அகாதெமி மற்றும் ஒசூா் வியுகம் அமைப்பினா் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனா். இந்த போட்டிகள் அதியமான் பொறியியல் கல்லூரியின் உட்புற மைதானத்தில் நடைபெறுகிறது.