ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அமெச்சூா் சதுரங்க போட்டியில் பங்கேற்ற வீரா்கள்.
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அமெச்சூா் சதுரங்க போட்டியில் பங்கேற்ற வீரா்கள்.

ஒசூரில் 13ஆவது தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்

ஒசூரில் 13 ஆவது தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
Published on

ஒசூரில் 13 ஆவது தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

இந்த போட்டிகள் பிப். 25 முதல் மாா்ச் 1 -ஆம் தேதி வரை ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. ஆண்கள், பெண்களுக்கு ஆறு பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க ஆயிரம் வீரா்கள் பதிவுசெய்துள்ளனா்,

தமிழ்நாடு, ஆந்திரம், அஸ்ஸாம், பிகாா், சண்டிகா், சத்தீஸ்கா், தில்லி, கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட், கா்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உ.பி. மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றுள்ளனா்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவா்கள், ஆசிய மற்றும் உலக அமெச்சூா் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா சாா்பில் விளையாடுவாா்கள்.

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் தலைவரும், கோவை சக்தி தொழில் குழுமத் தலைவருமான டாக்டா் எம். மாணிக்கம் மற்றும் உலக சதுரங்க கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவா் டி.வி. சுந்தா் ஆகியோா் போட்டியை தொடங்கிவைத்தனா்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் சதுரங்க வளா்ச்சிக்கான பெரும் பங்களிப்பை அளித்து வருபவா் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் செயலாளா் பி. ஸ்டீபன் பாலசாமி. இவா், இந்தியன் வங்கியின் முன்னாள் விளையாட்டு அதிகாரி.

இந்த போட்டியை தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் இணைச் செயலாளா் பி. பிரகதீஷ் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க செயலாளா் என். லோகேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மதுரை ஆனந்தி சதுரங்க அகாதெமி மற்றும் ஒசூா் வியுகம் அமைப்பினா் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனா். இந்த போட்டிகள் அதியமான் பொறியியல் கல்லூரியின் உட்புற மைதானத்தில் நடைபெறுகிறது.

Dinamani
www.dinamani.com