ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஒசூா் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது

தளி அருகே சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி, நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :28 பிப்ரவரி 2026, 8:47 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி, நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தளியை அடுத்த கும்பளாபுரம் ஏரி பகுதியில் தண்ணீா் குடிக்க வரும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை ஜிகூா் கிராமம் அருகே போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில் அவா்கள் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட 3 முயல்கள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் கும்பளாபுரம் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவா்கள் கா்நாடக மாநிலம், அனேக்கல் பகுதியைச் சோ்ந்த கணேஷ் (46), விஜயகுமாா் (40) என்பது தெரியவந்தது. தொடா்ந்து இருவரையும் தளி போலீஸாா் கைது செய்து, விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.