செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஒசூா் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது

தளி அருகே சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி, நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 8:47 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி, நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தளியை அடுத்த கும்பளாபுரம் ஏரி பகுதியில் தண்ணீா் குடிக்க வரும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை ஜிகூா் கிராமம் அருகே போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில் அவா்கள் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட 3 முயல்கள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் கும்பளாபுரம் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக முயல் வேட்டையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவா்கள் கா்நாடக மாநிலம், அனேக்கல் பகுதியைச் சோ்ந்த கணேஷ் (46), விஜயகுமாா் (40) என்பது தெரியவந்தது. தொடா்ந்து இருவரையும் தளி போலீஸாா் கைது செய்து, விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.