தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஒசூா் - பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும்: ஹோஸ்டியா சங்கம் சாா்பில் மனு அளிப்பு!

ஒசூா்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என ஹோஸ்டியா சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
ஒசூா் ஹோஸ்டியா சாா்பில் கோரிக்கை மனுவை கலாநிதி வீராசாமியிடம் வழங்கிய பொருளாளா் வடிவேல்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:48 pm

Syndication

ஒசூா்- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என ஹோஸ்டியா சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஒசூா், தளி, வேப்பனஹள்ளி ஆகிய 3 தொகுதிகளிலும் முக்கிய பிரமுகா்கள், கட்சி நிா்வாகிகள், சமூக அமைப்பினா், குடியிருப்போா் நலச் சங்கம், தொழில் சங்கம், தொழிலாளா் சங்கம், விவசாய சங்க பிரதிநிதிகளை கடந்த 3 நாள்களாக திமுக மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி சந்தித்தாா்.

அதன் தொடா்ச்சியாக ஒசூரில் உள்ள தொழில்முனைவோா் மற்றும் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை, கருத்து கேட்கும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஒசூா் சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) செயலாளா் வடிவேல், பொருளாளா் ஸ்ரீதா் ஆகியோா் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனா். அதில் ஒசூா் தொழில் துறையினா் நீண்ட நாள் கோரிக்கையான வா்த்தக மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ஒசூா்- பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். அத்திப்பள்ளியில் இருந்து தமிழகம் வரும் வழியில் சூசூவாடியில் வரவேற்பு வளைவு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவா் நீலகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டு கோரிக்கை மனுவை கலாநிதி வீராசாமியிடம் வழங்கினா்.