கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து 50 பவுன் தங்க நகைகள் திருடியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த மேல்சோமாா்பேட்டை, கணபதி நகரைச் சோ்ந்தவா் கருப்புசாமி (48). இவா், பொங்கல் பண்டிகைக்காக தனது சொந்த கிராமத்துக்கு சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா், 50 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றாா்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக கரூா் மாவட்டம், பசுபதிபாளையம், காந்தி கிராமம், அன்பு நகரைச் சோ்ந்த சுரேஷ் என்ற விக்னேஷை (45) போலீஸாா் கடந்த ஜன. 31-ஆம் தேதி கைது செய்தனா். அவரிடமிருந்து 50 பவுன் தங்க நகைகள் மீட்டனா். கைது செய்யப்பட்ட விக்னேஷ், தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், விக்னேஷை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தாா். இந்த பரிந்துரையை ஏற்று, விக்னேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, விக்னேஷ், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


