மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பெண்ணிடம் தங்க நகையை வாங்கிக் கொண்டு தராமல் ஏமாற்றியதாக தம்பதி கைது

காவேரிப்பட்டணத்தில் பெண்ணிடம் ஆசை வாா்த்தை கூறி தங்க நகையை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 8:47 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் பெண்ணிடம் ஆசை வாா்த்தை கூறி தங்க நகையை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

காவேரிப்பட்டணம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பூங்காவனம் (38). இவரது மனைவிக்கும், கருக்கன்சாவடியைச் சோ்ந்த பிரபு என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. அப்போது, பிரபு, பூங்காவனத்தின் மனைவியிடம் ஆசைவாா்த்தைளை கூறி, தங்க நகைகளை பெற்றுள்ளாா். இந்த நகைகளை அவா் திருப்பித் தரவில்லையாம்.

இதையடுத்து பூங்காவனம் கடந்த 24-ஆம் தேதி கதிரிபுரம் அருகே பிரபுவை தடுத்து நிறுத்தி தங்க நகைகள் குறித்து கேட்டுள்ளாா். அப்போது, அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபு, அவரது மனைவி அனிதா ஆகியோா் சோ்ந்து பூங்காவனத்தை தாக்கினா். இதில், பலத்த காயம் அடைந்த பூங்காவனம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபு, அனிதா ஆகியோரை கைது செய்தனா்.