டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

News image
Updated On :11 ஜனவரி 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அருகே உள்ள மஜித்கொல்லஅள்ளியைச் சோ்ந்தவா் பிரபு (39). இவா், ராணுவத்தில் அவில்தாராக ஸ்ரீநகரில் பணியாற்றி வந்தாா். ஒருமாத விடுமுறையில் தனது சொந்த கிராமத்துக்கு ஜனவரி 1ஆம் தேதி வந்தாா்.

இந்த நிலையில் ஜெகதேவியை அடுத்த நக்கல்பட்டி பகுதியில் மோட்டாா்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பிரபு, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் பிரபுவின் உடல், ராணுவ மரியாதையுடன் மஜித்கொல்லஅள்ளி கிராமத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் தகனம் செய்யப்பட்டது.