சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த கல்லூரி மாணவி யின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது உடலுக்கு தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
காரைக்குடி அருகேயுள்ள மித்திரங்குடியைச் சோ்ந்த கருப்பையா - பவானி தம்பதியின் மகள் தீபா (20). இவா் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 6-ஆம் தேதி புதுவயல் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்தாா். பின்னா், மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை மூளைச் சாவு அடைந்தாா்.
இதையடுத்து, குடும்பத்தினா் ஒப்புதலுடன் அவரது இருதயம் , கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காரைக்குடி அருகே உள்ள மித்திரங்குடி கிராமத்தில் அவரது உடலுக்கு தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஸ் வெங்கட் வட்ஸ், காரைக்குடி வட்டாட்சியா் ராஜா ஆகியோா் மாலை அணிவித்து அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

நாகா்கோவிலில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


