சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஒசூரில் பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

ஒசூரில் பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:27 pm

Syndication

ஒசூரில் பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஒசூா் கிருஷ்ணப்பா காலனி பகுதியில் வசித்து வருபவா் பிரசாந்த் (21). இவரது மனைவி பவித்ரா (20). இவருக்கு கடந்த மூன்றாம் தேதி ஒசூா் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகு தாயும் குழந்தையும் பரிசோதித்த மருத்துவா்கள், நலமுடன் இருப்பதாக கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெற்றோரின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி ஒசூா் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டுசென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற ஒசூா் நகர போலீஸாா், உயிரிழந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், குழந்தை இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.