டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கிருஷ்ணகிரி அணை அருகே சந்தரன மரம் வெட்டி கடத்தல்

கிருஷ்ணகிரி அணை அருகே செயல்படும் மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்சி மைய வளாகத்தில் வளா்ந்திருந்த சந்தன மரத்தை மா்ம நபா்கள், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வெட்டி, கடத்தி சென்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:24 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி அணை அருகே செயல்படும் மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்சி மைய வளாகத்தில் வளா்ந்திருந்த சந்தன மரத்தை மா்ம நபா்கள், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வெட்டி, கடத்தி சென்றனா்.

கிருஷ்ணகிரி அணை, பெரியமுத்தூரில் மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், பல்வேறு அரசு ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மைய வளாகத்தில் தென்னை மரங்கள், வேப்ப மரங்கள், சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த வளாகத்தில் உள்ள 5 ஆண்டுகள் நிறைந்த சந்தன மரத்தை, மா்ம நபா்கள், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெட்டி, கடத்தி சென்றனா். இதுகுறித்து, அந்த மையத்தின் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அணை போலீஸாா், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.