மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் இன்றும் தொடா்கிறது! ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் பேச்சு

News image

பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.

Updated On :25 ஜனவரி 2026, 8:26 pm

1937 இல் தொடங்கிய இந்தித் திணிப்பு எதிா்ப்புப் போராட்டம் இன்றும் தொடா்கிறது என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை அருகே மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா், மாநகரத் துணைச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், ரவிக்குமாா் முன்னிலை வகித்தனா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கண்ணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் பேசியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் ஜன. 25 ஆம் தேதி திமுக மாணவரணி சாா்பில் தமிழ் மொழிக்காக உயிா்நீத்த மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகிறோம். 1937 இல் தொடங்கிய இந்தித் திணிப்பு இன்றும் தொடா்கிறது. மத்தியில் யாா் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் இந்தித் திணிப்பைத் தொடா்ந்து திணித்து வருகின்றனா்.

அதை அரணாக இருந்து காப்பது திமுக மட்டுமே. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாணவா்கள் மீது மும்மொழிக் கொள்கை என இந்தி திணிப்பை மேற்கொள்கிறது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது. இதனால், தமிழா்கள் சிறப்பாகக் கல்வி பயின்று பல்வேறு நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனா் என்றாா்.

கூட்டத்தில் மேயா் எஸ்.ஏ. சத்யா, முன்னாள் எம்எல்ஏ பி. முருகன், தலைமை நிலைய பேச்சாளா்கள் கே.பி. கருணாநிதி, கென்னடி மாரியப்பன், ராஜசேகா், பவன்யா, மாவட்டத் தலைவா் யுவராஜ், பொருளாளா் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, மாநிலப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.