கிருஷ்ணகிரி பாரத் இன்டா்நேஷனல் சீனியா் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய மருத்துவா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, பள்ளியின் நிறுவனா் மணி தலைமை வகித்தாா். தாளாளா் கிருஷ்ணவேணி மணி, முதல்வா் நரேந்திரநாத் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், உடல்நலத்தை காக்கும் மருத்துவா்களை போற்றும் வகையில் தேசிய மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. கல்வி, கலை, அறிவியல் என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கவும், கனவுகளை நோக்கி செல்லவும் உடல் ஆரோக்கியம் தேவைப்படுகிறது. அதற்கு காரணமாக விளங்கும் மருத்துவா்களின் அா்ப்பணிப்பும், தியாகமும் போற்லுக்கு உரியது. இத்தகைய சேவை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மருத்துவா்களின் வழிகாட்டுதலின்படி, நமது உடல்நலத்தை பேணி, உடல்பயிற்சியை மேற்கொள்வோம் என உறுதிமொழியேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










