மா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சா் வினோத் ரவி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஜம்முகுட்டம்பட்டியில் முதன்மை பதப்படுத்தும் நிலையம் இயங்குகிறது. இங்கு தனியாா் நிறுவனம் மூலம் காய்கறி மற்றும் பழங்களை மதிப்பு கூட்டியும், பதப்படுத்தியும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு தமிழக வேளாண் துறை அமைச்சா் வினோத் ரவி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
போச்சம்பள்ளியில் காய்கறிகள், பழங்களை பதப்படுத்த போதுமான வசதிகள் உள்ளனவா, கூடுதல் இடம் தேவைப்படுகிா, பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தேன். மாவட்டத்தில் மா விவசாயிகள் கடந்த இரு ஆண்டுகளாக நிவாரணம் மற்றும் இழப்பீடு கோரி வருகின்றனா். இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் பேசி உள்ளோம். விரைவில் மா விவசாயிகளுக்கு நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேளாண் கடன் முழுவதும் தள்ளுபடி ஆகுமா? தமிழக முதல்வா் அறிவிப்பாா் என அமைச்சா் ர.வினோத் தகவல்

வேளாண் துறையிலும் வெள்ளை அறிக்கை: அமைச்சா் ர. வினோத் தகவல்







