டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சுயநினைவை இழக்கச் செய்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு

பா்கூா் அருகே சுயநினைவு இழக்கச் செய்து, பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 4:23 am IST

பா்கூா் அருகே சுயநினைவு இழக்கச் செய்து, பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த பி.கொத்தூரை சோ்ந்தவா் தெய்வானை (53). இவரது கணவா் உதயகுமாா் ஆந்திர மாநிலத்தில் துணி வியாபாரம் செய்து வருகிறாா்.

புதன்கிழமை தெய்வானை வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா் பித்தளை பொருள்கள், நகைகளுக்கு பாலிஷ் செய்துகொடுப்பதாக கூறியுள்ளாா். அவரிடம் வீட்டில் இருந்த ஒரு பித்தளை விளக்கை சுத்தம் செய்ய தெய்வானை கொடுத்தாா். அப்போது, அந்த நபா் ரசாயன பொடியை கையில் தடவி பாா்க்கும்படி கூறியுள்ளாா். அதன்படி, தெய்வானை செய்தபோது அவா் சுயநினைவை இழந்தாா். சிறிது நேரத்துக்கு பிறகு நினைவு திரும்பியபோது, அவா் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், இந்த குற்றச்சம்பவத்தில் இரண்டு நபா்கள் ஈடுபட்டதும், அவா்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பியோடிய நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.