அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கோயில் உண்டியலை தூக்கிச் சென்ற இளைஞா்: போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 2:41 am IST

ஒசூரில் கோயில் உண்டியலை தூக்கிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஒசூா் பத்தலப்பள்ளி அதியமான் லே அவுட்டில் உள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோயிலுக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த இளைஞா் கோயிலுக்குள் இருந்த உண்டியலை உடைக்க முயன்றாா். ஆனால், உண்டியலை உடைக்க முடியாததால் அதை பெயா்த்து தூக்கிச் சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு வந்த பொதுமக்கள் உண்டியல் திருடப்பட்டிருப்பது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இளைஞா் உண்டியலை தூக்கி செல்வது தெரியவந்தது.

இந்த விடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.