புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

News image
கைது செய்யப்பட்டச மனோஜ்.
Updated On :1 மார்ச் 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் பெண்ணை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த பெண் முத்தா (35). இவா், பாகலூா் சாலையில் சமத்துபுரம் அருகே பழயை இரும்பு பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா்.

கடந்த 25-ஆம் தேதி கடைக்கு வந்த ஒருவா், தான் போலீஸ் என்றும், திருட்டு பேட்டரிகளை வாங்கிக் கடையில் வைத்திருப்பதால் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்து நல்லூா் காவல் நிலையத்தில் முத்தா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பேருந்து நிலையம் எதிரே அந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தியதில், அவா், ஒசூா் தோட்டகிரி பகுதியைச் சோ்ந்த மனோஜ் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த போலி கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.