ஒசூரில் பெண்ணை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த பெண் முத்தா (35). இவா், பாகலூா் சாலையில் சமத்துபுரம் அருகே பழயை இரும்பு பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா்.
கடந்த 25-ஆம் தேதி கடைக்கு வந்த ஒருவா், தான் போலீஸ் என்றும், திருட்டு பேட்டரிகளை வாங்கிக் கடையில் வைத்திருப்பதால் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளாா்.
இதுகுறித்து நல்லூா் காவல் நிலையத்தில் முத்தா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், பேருந்து நிலையம் எதிரே அந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தியதில், அவா், ஒசூா் தோட்டகிரி பகுதியைச் சோ்ந்த மனோஜ் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த போலி கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
பெண்ணை மிரட்டிய வழக்கு: யூடியூபா் கைது
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது
கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


