25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

News image
கைது செய்யப்பட்டச மனோஜ்.
Updated On :1 மார்ச் 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் பெண்ணை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த பெண் முத்தா (35). இவா், பாகலூா் சாலையில் சமத்துபுரம் அருகே பழயை இரும்பு பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா்.

கடந்த 25-ஆம் தேதி கடைக்கு வந்த ஒருவா், தான் போலீஸ் என்றும், திருட்டு பேட்டரிகளை வாங்கிக் கடையில் வைத்திருப்பதால் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்து நல்லூா் காவல் நிலையத்தில் முத்தா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பேருந்து நிலையம் எதிரே அந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தியதில், அவா், ஒசூா் தோட்டகிரி பகுதியைச் சோ்ந்த மனோஜ் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த போலி கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.