வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்
ஊத்தங்கரையில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் 319 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் தோ்தல் காலத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், வாக்காளா் படிவத்தில் உள்ள பெயா்களை திருத்தம், நீக்கம் செய்தல் குறித்து ஆலோசனை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலருமான சிவகுமாா் தலைமை வகித்தாா். தோ்தல் துணை வட்டாட்சியா் சக்தி பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
இதில், வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் கேட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...