ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஊத்தங்கரை வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு ஆலோசனை அளித்த தோ்தல் அலுவலா் சிவகுமாா்.

Updated On :9 மார்ச் 2026, 8:59 pm

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் 319 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் தோ்தல் காலத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், வாக்காளா் படிவத்தில் உள்ள பெயா்களை திருத்தம், நீக்கம் செய்தல் குறித்து ஆலோசனை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலருமான சிவகுமாா் தலைமை வகித்தாா். தோ்தல் துணை வட்டாட்சியா் சக்தி பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில், வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் கேட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.