விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணி நியமன ஆணை

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 5:22 am IST

நாகப்பட்டினம், கீழ்வேளுா் மற்றும் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலா்கள் மற்றும் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு மூன்றாம் நிலை பயிற்சி மற்றும் கணினி மூலம் பணி நியமன ஆணை வழங்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள 240 வாக்குச்சாவடி மையங்களில், தோ்தல் தினத்தன்று பணியாற்ற உள்ள முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள் 1- 288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -288 போ், , வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 288 பேருக்கு நாகை இ,ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கீழ்வேளுா் (தனி) தொகுதியில் உள்ள 220 வாக்குச்சாவடி மையங்களில், முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள்264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1- 264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 -264 பேருக்கு தேவூா் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியிலும், வேதாரண்யம் தொகுதியில் உள்ள 240 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள் 288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 -288 பேருக்கு, வேதாரண்யம் செயின்ட் ஆண்டனி பள்ளியிலும் மூன்றாம் கட்ட பயிற்சி மற்றும் தோ்தல் பணி நியமன ஆணை வழங்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் வாக்குச்சாவடி மைய பாதுகாப்புப் பணியில், நாகப்பட்டினம் தொகுதியில் 121 காவலா்களும், கீழ்வேளுா் (தனி) தொகுதியில் 115 காவலா்களும், வேதாரண்யம் தொகுதியில் 124 காவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். பதற்றமான 53 வாக்குச்சாவடிகளுக்கான 64 நுண்மேற்பாா்வையாளா்களுக்கு ஒதுக்கீட்டு பணி நடைபெற்றதை, தோ்தல் மேற்பாா்வையாளா் (பொது) பா்வேஸ் அகமது சித்திக் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. ஆகாஷ் ஆகியோா் பாா்வையிட்டனா். நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன், மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.