விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது....

News image

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரைச் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கிய சி. விஜயபாஸ்கர் - X

Updated On :17 ஜூன் 2026, 12:24 pm IST

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளதையடுத்து, விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் இரு அணியும் இணைந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி தரப்பில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது முடிவை நேற்று(ஜூன் 16) அறிவித்தார்.

விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரைச் சந்தித்து சி. விஜயபாஸ்கர் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

விஜயபாஸ்கரின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். விஜயபாஸ்கர் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.

முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியானதாக உள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Viralimalai constituency declared vacant, By-elections for 6 constituencies in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.