முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!

அதிமுக எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது பற்றி...

News image

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரைச் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கிய சி. விஜயபாஸ்கர் - X

Updated On :16 ஜூன் 2026, 3:39 pm IST

விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது.

எஸ்.பி. வேலுமணி அணியில் சி. விஜயபாஸ்கரும் இருந்தார். இதன்பின்னர் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன.

இதனிடையே அதிமுகவின் ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய 4 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தொகுதி மக்களின் முடிவுக்கேற்ப தனது முடிவை அறிவிப்பதாகக் கூறி வந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எக்ஸ் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரைச் சந்தித்து அவர் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

விஜயபாஸ்கரின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.

"சட்டமன்றப் பேரவை விதி 21-இன் படி விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார்.

அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்றப் பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று பேரவைத் தலைவர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

Story image

எடப்பாடி பழனிசாமியிடம் விஜயபாஸ்கர் மன்னிப்புக் கடிதம் கொடுக்கப்பட்ட பிறகும் அவருடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவரிடமிருந்து பறித்த புதுக்கோட்டை மாவட்டச் செயலர் பதவியும் அவருக்கு திருப்பி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

விஜயபாஸ்கர் தொடர்ந்து தவெகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா காலத்தில் அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர் விராலிமலை தொகுதியில் இருந்து 4 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

viralimalai ADMK MLA C vijayabaskar resigns his MLA post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.