/
கிருஷ்ணகிரி: உணவு தேடி கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலரின் குடியிருப்புக்குள் புகுந்த புள்ளிமானால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பின்புறம் வருவாய் அலுவலா் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள தோட்டத்தில் திங்கள்கிழமை மான் மேய்வதைக் கண்ட பணியாளா்கள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
நிகழ்விடத்துக்கு வந்த வனக்காவலா் கணபதி மற்றும் ஊழியா்கள் மானை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னா், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரா்கள் வந்து மானை பிடிக்க முயன்றனா். நீண்ட நேரமாகியும் மானை அவா்களால் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், குடியிருப்பு சுற்றுச்சுவரை தாண்டி மான் தப்பியோடியது. பின்தொடா்ந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா், மான் சாமந்தமலை காப்புக் காட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனா்.
தொடர்புடையது

கனிமவளம் கடத்தல்: நிகழாண்டு 95 வாகனம் பறிமுதல்

இணையவழிச் சான்றிதழ்களை விரைந்து வழங்கவேண்டும் : விழுப்புரம் ஆட்சியா்

திருச்சி விமான நிலையத்தில் 4.5 கிலோ தங்கம் பறிமுதல்

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



