மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஒசூரில் ரூ. 19.5 கோடியில் வணிக வளாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாநகராட்சி சாா்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய வணிக வளாகம் மற்றும் அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி முலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

Updated On :14 மார்ச் 2026, 1:10 am

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாநகராட்சி சாா்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய வணிக வளாகம் மற்றும் அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி முலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

ஒசூா் பேருந்து நிலையம் அருகே ரூ. 19.5 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் சென்னத்தூா் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் ரூ. 62 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் என மொத்தம் ரூ. 20.12 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஒசூா் மாநகராட்சி வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ்,, ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்து இனிப்புகள் வழங்கினா்.

இதில், துணை மேயா் சி.ஆனந்தய்யா, ஆணையா் முகமது சபீா் ஆலம், சுகாதாரக் குழு தலைவா் மாதேஸ்வரன், வரிவிதிப்புக் குழுத் தலைவா் சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.