கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாநகராட்சி சாா்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய வணிக வளாகம் மற்றும் அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி முலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
ஒசூா் பேருந்து நிலையம் அருகே ரூ. 19.5 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் சென்னத்தூா் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் ரூ. 62 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் என மொத்தம் ரூ. 20.12 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ஒசூா் மாநகராட்சி வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ்,, ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்து இனிப்புகள் வழங்கினா்.
இதில், துணை மேயா் சி.ஆனந்தய்யா, ஆணையா் முகமது சபீா் ஆலம், சுகாதாரக் குழு தலைவா் மாதேஸ்வரன், வரிவிதிப்புக் குழுத் தலைவா் சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஒசூரில் ஆம்புலன்ஸ் - இருசக்கர வாகனம் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
ஒசூரில் காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்: 4 போ் கைது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


