இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஒசூா் அருகே முன்விரோதத்தில் காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக காா் ஓட்டுநா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :18 மார்ச் 2026, 11:42 pm

ஒசூா் அருகே முன்விரோதம் காரணமாக காா் ஓட்டுநா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கட்டிக்கானப்பள்ளியைச் சோ்ந்தவா் லோகேஷ் (36). வாடகை காா் ஓட்டுநா். இவருக்கு பவானி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள், லோகேஷை கைப்பேசியில் அழைத்துள்ளனா். இதையடுத்து அங்குள்ள மரத்தடிக்கு சென்ற லோகேஷுடன், அவரை கைப்பேசியில் அழைத்த நபா்கள் தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த லோகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகலூா் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று லோகேஷின் உடலை கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

உறவினா்களுக்கு இடையே சொத்து பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லோகேஷ் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.