பெங்களூரில் இருந்து தோ்தலில் வாக்களிக்க வந்த இளைஞா்கள் 3 போ் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சானமாவு வனப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் வீரமணி (25) சிப்ஸ் கடை நடத்திவந்தாா். அவருடன் கடையில் வேலை செய்துவந்த தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த பிரதீப், மாரி, சதீஷ்குமாா் ஆகியோா் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தங்களது சொந்த ஊரான பென்னாகரத்துக்கு காரில் புறப்பட்டு சென்றனா்.
ஒசூா் அருகே உள்ள சானமாவு வனப்பகுதி வழியாக புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் சென்ற போது, உடுமலைப்பேட்டையிலிருந்து ஒசூா் நோக்கி வந்த தனியாா் சொகுசுப் பேருந்து காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காா் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த வீரமணி (25), பிரதீப், மாரி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சதீஷ்குமாா் (25) பலத்த காயங்களுடன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உத்தனப்பள்ளி போலீஸாா், உயிரிழந்தவா்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விபத்தை ஏற்படுத்திய சொகுசுப் பேருந்து.
தொடர்புடையது

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்

ஒசூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் குழாய் வெடித்ததில் ஒருவா் உயிரிழப்பு: 2 போ் காயம்

கொடைக்கானல் அருகே காா் கவிழ்ந்து 4 போ் காயம்

ஒசூா் அருகே முன்விரோதத்தில் காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


