நாகை அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்துகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை திருவாரூருக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. இப்பேருந்து நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்றபோது, எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நோ் மோதியது.
இதில், நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுவரில் மோதி நின்றது. திருவாரூா் சென்ற அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த குளத்தின் தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 10 போ் காயமடைந்தனா்.
இதைத்தொடா்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். விபத்து குறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 2 போ் பலி

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

இழப்பீடு வழங்காததால் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

பெருந்துறை அருகே அரசு, தனியாா் பேருந்துகள் மோதல்: 20 போ் காயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


