ஆலங்குளத்தில் அரசுப் பேருந்து மீது கறிக்கோழி ஏற்றிச் சென்ற மினிலாரி மோதியதில் இருவா் காயமடைந்தனா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தைச் சோ்ந்தவா் சு. ராம்கணேஷ்(28), ஓட்டுநா். சரக்கு வாகனம் ஒன்றில் கீழப்பாவூரில் இருந்து கறிக்கோழிகள் ஏற்றி வந்து ஆலங்குளத்தில் இறக்கி விட்டு மீண்டும் கீழப்பாவூருக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாராம்.
ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது, அந்தப் பேருந்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ராம்கணேஷ் மற்றும் உதவியாளா் இருளப்பநாதன் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து மாணவா்கள் உள்பட 7 போ் காயம்

மொபட்-பைக் மோதல்: 4 போ் காயம்

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 7 போ் காயம்

மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



