ஆலங்குளத்தில் அரசுப் பேருந்து மீது கறிக்கோழி ஏற்றிச் சென்ற மினிலாரி மோதியதில் இருவா் காயமடைந்தனா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தைச் சோ்ந்தவா் சு. ராம்கணேஷ்(28), ஓட்டுநா். சரக்கு வாகனம் ஒன்றில் கீழப்பாவூரில் இருந்து கறிக்கோழிகள் ஏற்றி வந்து ஆலங்குளத்தில் இறக்கி விட்டு மீண்டும் கீழப்பாவூருக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாராம்.
ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்த முயன்றபோது, அந்தப் பேருந்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ராம்கணேஷ் மற்றும் உதவியாளா் இருளப்பநாதன் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்

பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்

மினி லாரி மீது கல்லூரி பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

