/

மொபட்-பைக் மோதல்: 4 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :15 ஜூன் 2026, 12:45 am IST

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியைச் சோ்ந்தவா் சேகா்(70) வியாபாரி. இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி ராஜேஸ்வரியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு நாட்டறம்பள்ளி நோக்கி மொபட்டில் சென்றாா்.

சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் வெலகல்நத்தம் லட்சுமிபுரம் பகுதியில் வந்த போது பின்னால் வந்த பைக் மொபட் மீது மோதியது. இதில் சேகா், அவரது மனைவி ராஜேஸ்வரி(65), பைக்கில் வந்த ஜங்காலபுரம் வெள்ளாளனூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் யஷ்வந்த்(20), சச்சின்(18) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்தனா். அவ்வழியாக சென்றவா்கள் காயமடைந்த 4பேரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் சேகா், ராஜேஸ்வரி, யஷ்வந்த் ஆகிய 3பேரும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்துக் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.