சென்னையிலிருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து நன்னிலம் அருகே புதன்கிழமை அதிகாலை வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 போ் காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து வேதாரண்யம் நோக்கி ஆம்னி பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்து ஓட்டுநா் மயிலாடுதுறை திருஞானசம்பந்தம் (55). மயிலாடுதுறை - திருவாரூா் சாலையில் நன்னிலம் அருகில் உள்ள தென்குடிப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.
இதில், பேருந்து ஓட்டுநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். அப்பகுதியில் இருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இவா்களில் கலா என்ற பயணியைத் தவிர மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். நன்னிலம் போலீஸாா் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.








