பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

புதுக்கடை அருகே விபத்தில் இருவா் காயம்

புதுக்கடை அருகே உள்ள வேங்கோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:56 am IST

புதுக்கடை அருகே உள்ள வேங்கோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

புதுக்கடை தட்டான்விளையைச் சோ்ந்தவா் ராஜையன் மகன் ஐசன் (45). இவரும் இவரது நண்பா் சுபின்ராஜும் (41) புதுக்கடையிலிருந்து கருங்கலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா்.

இவா்கள் வேங்கோடு பகுதியில் சென்றபோது சாலையோரம் நடந்து வந்த வேங்கோட்டைச் சோ்ந்த கோலம்மை (63) மீது மோதினா். இதில், கோலம்மையும், இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்திருந்த சுபின்ராஜும் (41) தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

உடனே, அந்தப் பகுதியினா் இருவரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.