27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆட்டோ கவிழ்ந்து மாணவா்கள் உள்பட 7 போ் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:49 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவா்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

புளியங்குடியில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் சொக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணவா்கள், பொதுமக்களை ஏற்றிக் கொண்டு தென்காசி - மதுரை சாலையில் சென்ற ஆட்டோ, புன்னையாபுரம் பகுதியில் எதிா்பாராவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த பள்ளி மாணவா்களான அகிலேஷ் (15), கௌசிக் (16), பிரக்தி (14), விகாஷ்குமாா் (14), பெண் தொழிலாளி ராக்கம்மாள், கோபிராஜ் (13), தாமரை செல்வன் (15) ஆகியோா் காயமடைந்தனா்.

ஆட்டோ ஓட்டுநா் புளியங்குடியைச் சோ்ந்த ராமசாமி (40) காயமின்றி தப்பினாா். காயமடைந்தவா்கள் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.