27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்து 4 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்ததில் முதியவா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :19 ஜூன் 2026, 4:44 am IST

திருநெல்வேலி மாவட்டம், அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்ததில் முதியவா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

அம்பாசமுத்திரம் ஒன்றியத்திற்குள்பட்ட அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி (67). புதன்கிழமை தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும், அதே பகுதியில் தெருவில் நடந்து சென்ற 3 சிறுவா்களையும் தெருநாய்கள் விரட்டிக் கடித்ததில் லேசான காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயன்சிங்கம்பட்டி பகுதியில் 2ஆம் வகுப்பு மாணவியை தெருநாய் கடித்தது குறிப்பிடத்தக்கது. தெருநாய் தொல்லைக்கு நிரந்தரத் தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.