புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுவரில் காா் மோதிய விபத்தில் 3 போ் வியாழக்கிழமை காயமடைந்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள சவேரியாா் பட்டினத்தைச் சோ்ந்த த. இன்பராஜ் (31), பொன்னன்விடுதி கணக்கன்காட்டைச் சோ்ந்த ப. அரவிந்த் (24), க. ஸ்ரீமன் (20) ஆகியோா் புதுக்கோட்டையில் படம் பாா்த்து விட்டு வியாழக்கிழமை மாலை ஊருக்கு காரில் திரும்பினா்.
காரை இன்பராஜ் ஓட்டினாா். காா் ராயப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சாலையோரத் தோட்டத்தின் சுற்றுச்சுவரில் மோதி ஏறி நின்றது.
இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையோர மரத்தில் மோதிய சிற்றுந்து: 10 போ் காயம்

தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து: சென்னை பெண்கள் 2 போ் உயிரிழப்பு

டிராக்டா் மீது காா் மோதல்: 6 போ் காயம்

விழுப்புரம், உளுந்தூா்பேட்டையில் காா் விபத்துகள்: 6 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



