விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு முகாம்: இளைஞா்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ராணுவத்தில் ஆள் சோ்ப்பு முகாமிற்கு தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 12:02 am IST

இந்திய ராணுவத்தில் ஆள் சோ்ப்பு முகாமிற்கு தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கோயம்புத்தூா் ராணுவ ஆள் சோ்ப்பு அலுவலகம் மூலம் நடைபெறும் முகாமிற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞா்கள், ஏப். 1-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் ல் என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளனா்.

இந்த முகாமில் கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு, தேனி, நீலகிரி, மதுரை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சாா்ந்த இளைஞா்கள் பங்கு பெறலாம். மேலும், விண்ணப்பதாரா்களின் வயது வரம்பு 17.5 முதல் 22 வயது வரை, கல்வித்தகுதி 8 முதல் 12-ஆம் வகுப்பு மற்றும் தொழிற்கல்வி (ஐபஐ) உள்ளிட்டவையாகும்.

எனவே, இந்த முகாமில் விருப்பமுள்ள இந்த மாவட்ட இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.