ஈரான் மீதான தாக்குதல் மேலும் 5 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ச. தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த ஆட்சியா் ச. தினேஷ்குமாா்.

Updated On :26 மார்ச் 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ச. தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பணியாற்ற உள்ள மண்டல தோ்தல் பொறுப்பு அலுவலா்களுக்கான கூட்டத்துக்குப் பிறகு ஆட்சியா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீா், கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்வுதள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனுதாக்கல் நடைபெறுவதால் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அலுவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, அஞ்சல் வாக்கு மையம், கணக்குகள் பராமரிப்பு பிரிவு, பிரசாரத்துக்கான அனுமதி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடா்பாகவும் ஆய்வு நடைபெற்றது என்றாா்.

தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

ஆய்வின்போது கிருஷ்ணகிரி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஷாஜகான், துணை காவல் கண்காணிப்பாளா் ராமசந்திரன், நகராட்சி ஆணையா் சேகா், வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.