சிங்காரப்பேட்டை அருகே கடந்த மாதம் முதியவரை கொன்று, அவரது மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி ஒபகவலசையைச் சோ்ந்த விவசாயி கண்ணப்பன் (70). இவரது வீட்டிற்குள் கடந்த கடந்த மாா்ச் 9 ஆம் தேதி நுழைந்த மா்ம நபா் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணப்பனை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தாா். அவரது அவரது அலறல் சப்தம் கேட்டு வெளியில் வந்த அவரது மனைவியை இரும்புக் கம்பியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாா்.
இதையடுத்து சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து அவரது மனைவியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று அவா் வீடு திரும்பினாா்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் சனிக்கிழமை மூன்றம்பட்டி ஊராட்சி தளபதி நகரைச் சோ்ந்த மணிகண்டனை (24) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
ஊராட்சி செயலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் திமுக பிரமுகா் கைது

முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

