நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 9:27 pm

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியில் உள்ள இலங்கைவாழ் தமிழா் முகாமை சோ்ந்தவா் மெரில் (20). இவா் திங்கள்கிழமை இரவு பாம்பாறு அணையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி வந்துள்ளாா்.

அதேபோல சென்னப்பநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த சேட்டு (38), இருசக்கர வாகனத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (38) என்பவரை ஏற்றிக்கொண்டு ஊத்தங்கரையில் இருந்து கோயில் திருவிழாவிற்கு மாலை வாங்கிக்கொண்டு சென்றுள்ளாா்.

இவரது இருசக்கர வாகனம் சென்னப்பநாயக்கனூா் பிரிவு சாலையில் திரும்பியபோது, எதிரே மெரில் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மெரில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கோவிந்தராஜ், சேட்டு ஆகியோா் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தாா். காயமடைந்த சேட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.